tamilnadu

img

எதிர்கால அரசியலுக்கு பீகார் தேர்தல் முன்வைக்கும்..... படிப்பினைகள் என்ன? நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு சீத்தாராம் யெச்சூரி நேர்காணல்

பீகார் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இடதுசாரி கட்சிகளுக்கு மிகச் சிறப்பாக அமைந்துள்ளன. குறிப்பாக போட்டியிட்ட இடங்கள்/ வென்ற இடங்கள் விகிதாச்சாரத்தில்! மேற்குவங்க தேர்தல்களில் இது எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும்? இடதுசாரிகளுக்கு பீகார் தேர்தல் சுட்டிக் காட்டும் பாதை என்ன?

பதில்: இடதுசாரிகளுக்கு மிக மிக சிறப்பானமுடிவு என்று பொருள். போட்டியிட்ட 29 தொகுதிகளில் 16ல் வென்றது என்பது மிகவும் சிறப்பானவெற்றி விகிதம். இது எதைக் காட்டுகிறது என்றால் இடதுசாரிகளின் தேவை இந்திய அரசியலில் உள்ளது என்பது மட்டுமல்ல; பீகார் மக்கள் செங்கொடி இயக்கத்தின் மீதுவைத்துள்ள நம்பிக்கையையும் வெளிப்படுத்துகிறது. ஏனெனில் இந்த காலம் முழுவதும் மக்களுடைய வாழ்வாதாரப் பிரச்சனைகளில் செங்கொடி இயக்கம்தான் அவர் களுக்காக போராடியது.ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைமையிலான “மகாகத் பந்தன்” கூட்டணியில் இடதுசாரிகள் இணைந்தனர் என்பது, மக்களின் பிரச்சனைகளை எழுப்பும் திறன் குறித்து அந்த கூட்டணிக்கு ஒரு நம்பகத்தன்மையை உருவாக்கியது. இடதுசாரி வேட்பாளர்களுக்கு மக்கள் வாக்களித்த நம்பிக்கையின் அடிப்படைஎன்னவென்றால் இடதுசாரி கட்சிகள் சட்டமன்றத்தில் அவர்களது பிரச்சனைகளை எழுப்புவார்கள்; அரசாங்கத்தை செயல்பட நிர்பந்திப்பார்கள் என்பதுதான்.சமூக நீதியும் பொருளாதார நீதியும் பிரிக்கமுடியாதவை என்பதை இது தெளிவாக்கியது. பீகாரில் கடந்த 30 ஆண்டு அரசியலில் இது மிக மிக முக்கியமான திருப்புமுனையாகும். இடதுசாரிகளின் மிகப்பெரிய பங்களிப்பு இது.தேசத்தின் ஏனைய பகுதிகளிலும் இதே போன்றதாக்கம்தான் உருவாகும். மக்களின் கோரிக்கைகளை முன்வைப்பதற்கு மட்டுமல்ல; அரசாங்கங்களை செயல்படத் தூண்டுவதற்கும்இடதுசாரிகள் தேவை. தேசத்தின் பெரும்பான்மையாக உள்ள உழைக்கும் மக்களுக்குஆதரவாக செயல்பட இடதுசாரிகள் தேவை.அந்த வகையில்தான் இடதுசாரிகளின் மீது மக் கள் நம்பிக்கையை வெளிப்படுத்துகின்றனர். இது ஆரோக்கியமானது.

அடுத்து நீங்கள் எதிர்கொள்ளப் போகும் பெரிய தேர்தல் மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல்தான். அங்கு நீங்கள் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து உள்ளீர்கள். எந்த வகையில் பீகார் படிப்பினைகள் மேற்கு வங்க தேர்தல் போராட்டத்தில் பொருந்துகின்றன???

பதில்: பீகார் தேர்தல் படிப்பினைகள் வெளிப் படுத்துவது என்னவென்றால், முக்கிய நோக்கமான பாஜகவை தோற்கடிப்பது என்பது நிறைவேற மக்களின் ஒற்றுமை/அரசியல் சக்திகளின்ஒற்றுமை தேவை. எதிர்ப்பு வாக்குகள் சிதறக்கூடாது. இந்தியாவின் நலன்களை பாதுகாக்கவும்/ அரசியல் சட்டத்தை பாதுகாக்கவும் அந்த குறிப்பிட்ட மாநிலங்களின் நலன் களை பாதுகாக்காவும் இது அவசியம்.குறிப்பாக மேற்கு வங்கம் ஒரு எல்லை மாநிலம் என்பதை நினைவில் கொள்வது அவசியம். தேசப் பிரிவினையின் பொழுது மதக்கலவரங்களால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட மாநிலம். அதனால் தான் காந்திஜி நவகாளி சென்றார். அவர் அங்கு அனுமதிக்கப்படாத காரணத்தால் கல்கத்தாவில் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்தார். மதவாத சக்திகள்மேற்கு வங்கத்தில் சூழ்நிலைகளை தமக்கு சாதகமாக மாற்றிட முயற்சி செய்வர். மேற்கு வங்கத்திற்கு மட்டுமல்ல; இந்தியா முழுமைக்குமே இது ஆபத்தானது. இது தடுக்கப்பட வேண்டும்.பீகாரில் மிகவும் அதிகமாக விவாதிக்கப்பட்டது காங்கிரஸின் மோசமான வெற்றி விகிதம் தான். ஒருவேளை காங்கிரஸ் 70 தொகுதிகளில் போட்டியிடாமல் இடதுசாரி கட்சிகள் அதிக தொகுதிகளில் போட்டியிட்டு இருந்தால் சூழல் வேறு மாதிரியாக இருந்திருக்கும். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
பதில்: அவ்வாறு இருப்பதற்கு வாய்ப்புஉண்டு. அதைத்தான் நாங்கள் தொடர்ந்துகூறி வருகிறோம். காங்கிரசும் இடதுசாரி கட்சிகளும் 99 தொகுதிகளில் போட்டியிட்டன. இதனை சமமாக பகிர்ந்து கொண்டிருந்தால்இன்நேரம் மகாபந்தன் ஆட்சி அமைந்திருக்கும் என நான் எண்ணுகிறேன். ஏனெனில் பாஜக கூட்டணி பெரும்பான்மையைவிட 3 தொகுதிகள் தான் அதிகமாக பெற்றுள்ளது. இடதுசாரிகள் அதிக இடங்களில் போட்டியிட்டு இருந்தால், வெற்றி விகிதம் அடிப்படையில், மகாபந்தன் ஆட்சி அமைந்திருக்கும்.

காங்கிரசின் குறைவான வெற்றி விகிதம் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

பதில்: அது மிகவும் துரதிஷ்டவசமானது. இடதுசாரிகள் ஒரு முக்கியமான அம்சத்தை தொடர்ந்து கூறி வருகின்றன. குறிப்பாக நான்அதனை திரும்பத் திரும்ப அழுத்தமாக கூறுகிறேன். தொகுதி பங்கீடு ஏதாவது ஒரு ஒட்டுமொத்த எண்ணிக்கை அடிப்படையில் இருக்கக் கூடாது. எத்தனை தொகுதிகளை நீங்கள் எனக்கு கொடுப்பீர்கள் என்ற வகையில் கட்சிகள் சிந்திக்கின்றன. அப்படி இருக்கக்கூடாது. ராஷ்ட்ரிய ஜனதா தளத்துடன் இடதுசாரி கட்சிகளும் பேச்சுவார்த்தை நடத்தின. நாங்கள் ஒவ்வொரு தொகுதி குறித்தும் தனித்தனியாக ஆய்வு செய்தோம். ஒவ்வொரு கட்சிக்கும் எவ்வளவு பலம், யாருக்கு வெற்றிவாய்ப்பு அதிகமாக உள்ளது என்ற அடிப்படையில் பேச்சுவார்த்தை நடத்தினோம். அப்படித்தான் இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். காங்கிரஸ் கட்சியாக இருந்தாலும் அல்லது வேறு யாராக இருந்தாலும் தொகுதி பங்கீடு குறித்து விவாதிக்கும் பொழுது ஒவ்வொரு தொகுதியின் குறிப்பானசூழல்கள் மற்றும் பலம் அடிப்படையில் தீர்மானிக்கப்பட வேண்டும். ஏதோ ஒரு ஒட்டுமொத்தஎண்ணிக்கையின் அடிப்படையில் முடிவு செய்யக் கூடாது. எந்தக் கட்சிக்கு வெற்றி பெறும் வாய்ப்பு அதிகமாக உள்ளதோ அந்தவகையில் முடிவு செய்யப்பட வேண்டும். அதுதான் அடிப்படையாக இருக்க வேண்டும்.

சிபிஐ(எம்எல்) தலைவர் தீபங்கர் பட்டாச்சார்யா, ஒரு பேட்டியில் மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி குறித்த அணுகுமுறையில் மார்க்சிஸ்ட் கட்சியின் நிலைப்பாடை தான் ஆதரிக்கவில்லை என்று கூறினார். மேற்கு வங்கத்தில் பாஜகதான் முதன்மை எதிரி என அவர் கூறுகிறார். உங்களது பதில் என்ன? 

பதில்: பாஜகதான் முதன்மை எதிரி. யார்அதனை மறுக்க முடியும்? ஆனால் பாஜகவைமேற்கு வங்கத்தில் தோற்கடிக்க நாம் திரிணாமுல் காங்கிரசை தோற்கடித்தாக வேண்டும்என்பதுதான் தீபங்கர் பட்டாச்சார்யா கட்சியின் மேற்கு வங்க மாநிலக் குழு உட்பட இடதுசாரிகளின் மதிப்பீடு ஆகும். ஏனெனில் திரிணாமுல் காங்கிரஸின் தவறான ஆட்சி காரணமாக மக்களுக்கு உருவாகியுள்ள அதிருப்தியை பாஜக வலுவாக தனக்கு சாதகமாக மாற்றிக்கொண்டு வருகிறது. கடந்த 10 ஆண்டுகள் முழுவதும் அங்கு வன்முறை அரசியல்தான் அரங்கேற்றப்பட்டது. பல்லாயிரக்கணக்கான மக்கள்தமது வாழ்விடத்திலிருந்து துரத்தப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கானவர்கள் மீது வழக்குகள் போடப்பட்டு சிறைகளில் உள்ளனர். இவைஅனைத்திலும் இருந்து மக்கள் விடுதலை பெறவேண்டுமென்று எண்ணுகின்றனர். இந்த உணர்வு காரணமாக மக்கள் வேறு வழிதெரியாமல் பாஜகவை நோக்கி செல்கின்றனர். அங்கு பாஜக அல்லது திரிணாமுல் ஆகிய இரு கட்சிகள் பக்கம்தான் மக்கள் உள்ளனர் எனும் பிம்பத்தை உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதனை இந்த இரு கட்சிகளுமே விரும்புகின்றனர்.இந்த சூழலில் திரிணாமுல் உட்பட அனைவரும் ஒன்று சேர்ந்தால் எதிர்பக்கத்தில் இருப்பது பாஜக மட்டும்தான். திரிணாமுல் ஆட்சியின் அதிருப்தி முழுவதையும் பாஜக மட்டுமே கொள்முதல் செய்வதற்கான சூழல்உருவாகிவிடும். பாஜகவை தோற்கடிக்க வேண்டும் என்ற நோக்கமே தோற்கடிக்கப்பட்டுவிடும். இதுதான் இடதுசாரி கட்சிகளின் மதிப்பீடு ஆகும். சிபிஐ(எம்எல்) மேற்குவங்ககிளையும் இந்த மதிப்பீட்டை முழுமையாக ஏற்றுக் கொண்டுள்ளது. அதன் அடிப்படையில் இடதுசாரி அணியுடன் ஒத்துழைத்து வருகிறது.

காங்கிரஸ் குறித்து சில கூடுதலான கேள்விகள். காங்கிரஸ் இந்த மோசமான நிலையில் இருப்பதற்கு என்ன காரணம் என நினைக்கிறீர்கள்?பீகாரில் அது ஏன் குறைவான வெற்றி பெற்றது? கூட்டணி கட்சி என்ற முறையில் காங்கிரசை நீங்கள் எச்சரிக்கை உணர்வுடன் அணுகுவீர்களா?

பதில்: அப்படி அல்ல! காங்கிரசை எப்படி அணுகுவது என்பது பிரச்சனை அல்ல! நான் அவர்களுக்கு வேண்டுகோள்தான் வைக்கிறேன். ஒவ்வொரு தொகுதியாக ஆய்வு செய்து தீர்மானியுங்கள். ஒரு ஒட்டுமொத்த எண்ணிக்கை அடிப்படையில் பிரச்சனையை அணுகாதீர்கள். தேர்தல் களத்தில் அது உதவுவது இல்லை. ஒவ்வொரு தொகுதியாக ஆய்வு செய்து யாருக்கு வெற்றி வாய்ப்பு கூடுதலாக உள்ளது என்பதை தீர்மானியுங்கள்.

பீகார் தோல்வி காரணமாக காங்கிரஸ் என்றால் கூட்டணி கட்சிகளுக்கு நெருடல் இருக்குமா?

பதில்: நான் முன்வைக்கின்ற முறையை அமலாக்கினால் யாரும் எவருக்கும் நெருடலாக இருக்க மாட்டார்கள்.காங்கிரஸ் பெரியண்ணன் போல நடந்து கொள்ள முயல்கிறதா?பதில்: நான் குறிப்பிடுவது இதுதான்! இவ்வளவு தொகுதிகள் எனக்கு கண்டிப்பாக வேண்டும் எனும் கோரிக்கையை முன்வைக்காமல் கள எதார்த்தத்தை அடிப்படையாக கொண்டு தொகுதி பங்கீடு அணுகப்பட வேண்டும்.

இடதுசாரிகளின் வலுவான தளமான ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பிரதமர் நரேந்திர மோடி விவேகானந்தர் சிலையை திறந்து வைத்துள்ளார். வலதுசாரி அரசியலுடன் விவேகானந்தர் இணைக்கப்பட்டுள்ளார். ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்களுக்கு என்ன செய்தியை இது வெளிப்படுத்துகிறது? மோடி செயலின் பொருள் என்ன?

பதில்: முதலில் நான் ஒன்றை கூற விரும்புகிறேன். விவேகானந்தரை வலதுசாரி சக்திகள்தவறாக பறித்துக்கொண்டனர். விவேகானந்தருக்கு சிலை பல இடங்களில் இருக்கிறது. யாரும் அதனை ஆட்சேபிக்கவில்லை. கேள்விஎன்னவென்றால் ஏன் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம்? சிலை திறக்க ஏன் பிரதமர் செல்லவேண்டும்? அங்குதான் முழு சூழ்ச்சி மறைந் துள்ளது. விவேகானந்தர் சிலையை முன் வைத்து பிளவு அரசியலை அமலாக்க முயல்கின்றனர். நீங்கள் விவேகானந்தர் மீது மரியாதை வைத்துள்ளது உண்மை என்றால், ஒரு சிலையின் மூலம் அவரை கௌரவிப்பது நியாயம் என்று நீங்கள் நினைத்தால் அவர் சொன்னதை பின்பற்றுங்கள். விவேகானந்தர் சொன்னார்:“இந்தியா என்பது வேதாந்த மனம்; இஸ்லாமிய உடல்”. இதுதான் இந்தியாவின் ஒற்றுமை. இதுதான் எதிர்கால இந்தியாவின் வலிமை. மாண்புமிகு பிரதமர் இதனை பின்பற்றத் தயாரா?

தமிழில்: அ.அன்வர் உசேன்